ரூ. 1,000 ஆயிரத்திற்காக கல்லூரி மாணவிகளை கேவலப்படுத்திய அமைச்சர்!

ரூ. 1,000 ஆயிரத்திற்காக கல்லூரி மாணவிகளை கேவலப்படுத்திய அமைச்சர்!

Share it if you like it

அமைச்சர் துரைமுருகன் மீண்டும் தமிழக பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அதேவேளையில், பெண் காவலர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் இருக்க, அமைச்சர்களின் பேச்சு மறுபுறம் தமிழக பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.

அந்தவகையில், ஓசி பஸ்ஸில் பயணம் செய்வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக பெண்களை இழிவுப்படுத்தி பேசியிருந்தார். அதேபோல, வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் பெண்மணி ஒருவர் மனு கொடுத்தார். அந்த மனுவை வாங்கிய அமைச்சர் அந்த பெண்ணின் தலையில் ஓங்கி அடித்த காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. மூத்த தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். இவரது, பேச்சு சமீப நாட்களாக பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் இருந்து வருகிறது. அந்த வகையில், ரூ. 1000 பணத்திற்காக கல்லூரி மாணவிகளை அவமதிக்கும் நோக்கில் பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image

Share it if you like it