டி.ஆர்.பாலுவின் திமிர் பேச்சு: எஸ்.ஜி.சூர்யா பதிலடி!

டி.ஆர்.பாலுவின் திமிர் பேச்சு: எஸ்.ஜி.சூர்யா பதிலடி!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை டி. ஆர். பாலு விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு, அக்கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், கடந்த ஏப்ரல்-14- ஆம் தேதி தி.மு.க.வின் சொத்துப்படியலை வெளியிட்டார். இந்த, சொத்துப்பட்டியல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அரசியல் நோக்கர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் தி.மு.க.வை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் டி.ஆர்.பாலு. இவர், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பி இருந்தார். அதில், அண்ணாமலை தம்மிடம் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என டி.ஆர். பாலு கூறியிருந்தார். மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது நீதிமன்றத்தில் சந்திப்போம் என பா.ஜ.க. தலைவர் தரமான பதிலடியை கொடுத்தார். இதனால், ஆத்திமடைந்த டி.ஆர்.பாலு தமிழக பா.ஜ.க. தலைவரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து இருந்தார்.

டி. ஆர்.பாலுவின் இந்த திமிர் பேச்சிற்கு பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா தக்க பதிலடியை கொடுத்துள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image

Share it if you like it