இனி எந்த காலத்திலும் காங்கிரஸ் உடன் தொடர்பு கிடையாது என வி.சி.க. தலைவர் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், இனி எப்போதும் காங்கிரஸ் கட்சியுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தொடர்பு இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
அதாவது, நான் உயிருடன் இருக்கும் வரை காங்கிரஸ் உடன் தொடர்பு இல்லை என்று கூறிவிட்டு இன்று அதே காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்வது வெட்ககேடான செயல் என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.