உதயநிதி ரசிகர் மன்ற தலைவரை பங்கம் செய்த எஸ்.ஜி. சூர்யா!

உதயநிதி ரசிகர் மன்ற தலைவரை பங்கம் செய்த எஸ்.ஜி. சூர்யா!

Share it if you like it

பா.ஜ.க. மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா பள்ளி கல்வித்துறை அமைச்சரை கண்டித்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ;

தமிழகத்தில் ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகளை  நிறைவு செய்துள்ளது முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி. இந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வருகைக்காக 8.51 லட்சம் மாணவர்கள் காத்திருந்த அவலம் இன்று நடந்துள்ளது.

ஆட்சியமைத்து இரண்டாண்டு முடிந்த தருவாயில் தமிழக வரலாற்றில் +2 தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் தாமதப்படுத்திய ஒரே அரசு இந்த தி.மு.க. அரசு தான் என்ற கோப்பையை தட்டிச்சென்றுள்ளார் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின். முழு நேர உதயநிதி ரசிகர் மன்ற தலைவராகவும், பகுதி நேர தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்திற்கு வர தாமதம் ஆனதால் 8.51 லட்சம் +2 தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று காலை 9.30 மணியில் இருந்து தமிழகம் முழுக்க காக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் திருச்சியில் இருந்து விமானத்தில் வர தாமதமானதாக கூறுகிறார்கள். 8.51 லட்சம்  மாணவர்கள் சரியாக காலை 9.30 மணிக்கு கனவுகளுடன் காத்திருப்பார்கள் என்ற அக்கறை இருந்திருந்தால் முன்கூட்டிய திட்டமிட்டு சரியான நேரத்தில் அமைச்சர் வந்திருப்பார். அந்த பொறுப்புணர்வும், கடமையும் கிஞ்சித்தும் இல்லாததால் அமைச்சர் தாமதமாக வந்துள்ளார். இது இந்த தி.மு.க. ஆட்சியின் கையாலாகாத தனத்தையும், நிர்வாகத் திறமையின்மையையுமே  மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

தயவு செய்து உங்கள் அற்ப அரசியலுக்காக மாணவர்களின் கனவுகளுடன் விளையாட வேண்டும் முதல்வரே. தமிழகத்தின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவர்கள் சினம் கொண்டால் அதை தாங்கும் திராணி உங்களுக்கோ, உங்கள் அரசுக்கோ கிடையாது.

Image

Share it if you like it