மலேசியாவில் எங்களை  அடித்து விரட்டவில்லை… தன்னிலை விளக்கம் தந்த லியோனி!

மலேசியாவில் எங்களை அடித்து விரட்டவில்லை… தன்னிலை விளக்கம் தந்த லியோனி!

Share it if you like it

மலேசியாவில் நடந்தது என்னவென்பது குறித்து தி.மு.க.வின் மூத்த தலைவர் தன்னிலை விளக்கம் தந்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க.வின் மூத்த தலைவர் மற்றும் ஆபாச பேச்சாளராக இருப்பவர் திண்டுக்கல் லியோனி. இவர், பட்டிமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்மையில் மலேசியா சென்று இருந்தார். எனினும், நிகழ்ச்சியின் நேரத்தையும் தாண்டி இரண்டு மணிநேரம் தாமதமாக சென்றதாக சொல்லப்படுகிறது.

இதனால், கோவமடைந்த மலேசிய தமிழர்கள் அரங்கிலிருந்து வெளியேறினர். இதனிடையே, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு திண்டுக்கல் லியோனி வந்தார். அப்போது, அரங்கத்தின் வாயிலில் இருந்த மலேசிய தமிழர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தான் வந்த காரிலேயே லியோனி திரும்பி சென்றார்.

இப்படிப்பட்ட சூழலில் தான், மலேசியாவில் நடந்தது என்னவென்பதை குறித்து லியோனி தன்னிலை விளக்கம் கொடுத்து இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it