தமிழக முதல்வர் ஸ்டாலினை அ.தி.மு.க. மூத்த தலைவர் மிக கடுமையாக விமர்சனம் செய்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமாக இருப்பவர் ஜெயக்குமார். இவர், தி.மு.க. ஆட்சியில் நடக்கும் அவலங்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் புட்டுபுட்டு வைப்பது வழக்கம். அந்த வகையில், ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார். அப்போது, கடந்த ஆட்சியில் எங்களை பார்த்து சூடு, சொரணை, மானம் இருக்கிறதா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேட்டார். உங்கள் ஆட்சி தற்போது நடைபெறுகிறது. இப்போது, நான் கேட்கிறேன் இது எல்லாம் உங்களுக்கு இருக்கிறதா? என பத்திரிகையாளர்களிடம் காட்டமாக பேசியிருக்கிறார். இந்த, காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.