தமிழகம் முழுவதும் பா.ஜ.க. போராட்டம்… அண்ணாமலை அதிரடி!

தமிழகம் முழுவதும் பா.ஜ.க. போராட்டம்… அண்ணாமலை அதிரடி!

Share it if you like it

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க.வை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

‘தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச்சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க. சார்பில் வரும் 20-ம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம். இந்த கண்டன போராட்டத்தை மகளிர் அணியினர் முன்நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும் போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலை வகிப்பார் என பா.ஜ.க. மாநில ஊடக பிரிவுதலைவர் ரங்கா தெரிவித்துள்ளார்.


Share it if you like it