நானா அப்படியா சொன்னேன்:  பத்திரிகையாளரிடமிருந்து ஓட்டம் எடுத்த கனிமொழி!

நானா அப்படியா சொன்னேன்: பத்திரிகையாளரிடமிருந்து ஓட்டம் எடுத்த கனிமொழி!

Share it if you like it

பூரண மதுவிலக்கினை எப்போது கொண்டு வருவீர்கள் என பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு கனிமொழி திரு திருவென விழித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகளை உடனே மூடுவோம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து, தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியும் இதே கருத்தினை வலியுறுத்தி இருந்தார். இவர்களது, உறுதிமொழியை நம்பி தமிழக மக்கள் தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் அமர வைத்தனர். இந்த ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்து இருக்கிறது.

எனினும், மக்களின் விருப்பத்தை இந்த ஆட்சி முழுமையாக நிறைவேற்றவில்லை. அதில், ஒன்றாக இருப்பது பூரண மதுவிலக்கு. இப்படிப்பட்ட சூழல் நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் பத்திரிகையாளர் ஒருவர் பூரண மதுவிலக்கினை கொண்டு வருவோம் என கூறினீர்கள். எப்போது, கொண்டு வருவீர்கள் என கேள்வி எழுப்பினார். என்னை பார்த்து ஏன்? அந்த கேள்வியை கேட்டிறீர்கள் என்பது போல பத்திரிகையாளரை பார்த்து விட்டு அவர் ஓட்டம் எடுத்த சம்பவம்தான் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

Image

Share it if you like it