பைக் ஸ்டாண்ட் ஊழியரை கும்மாங்குத்து குத்திய தி.மு.க. வார்டு செயலாளர்!

பைக் ஸ்டாண்ட் ஊழியரை கும்மாங்குத்து குத்திய தி.மு.க. வார்டு செயலாளர்!

Share it if you like it

பைக் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்ட பைக்கிற்கு காசு கேட்ட நபர் மீது தி.மு.க. நிர்வாகி கொலைவெறியுடன் தாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதலே கழக கண்மணிகளின் அட்டூழியங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது ஓசி சுண்டல், ஓசி பீடி, ஓசி தேங்காய் கேட்டு பொதுமக்களை அடித்தும் உதைத்தும் பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி மாறியதே தவிர காட்சி மாறவில்லை. நாளுக்கு நாள் கழக கண்மணிகளின் தொடர் தொல்லைகள் அதிகரித்த வணம் உள்ளன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தி.மு.க. நிர்வாகியான அருள் என்பவர் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பைக் ஸ்டாண்டில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருக்கிறார். இதையடுத்து, அருள் தனது இரு சக்கர வாகனத்தை பைக் ஸ்டாண்டில் இருந்து எடுத்து செல்ல முயன்று இருக்கிறார். அப்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர் யுவராஜ் தி.மு.க. நிர்வாகியை வழி மறித்து இருசக்கர வாகனத்தை நிறுத்தியதற்கான கட்டணத்தை செலுத்துமாறு கூறியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அருள் என்னிடமே பணம் கேட்கிறாயா? நான் யார் தெரியுமா? என பணியில் இருந்த ஊழியரை மிக கடுமையாக தாக்கி இருக்கிறார்.

இந்த காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it