அண்ணா பல்கலை கழத்தின் கிளை கல்லூரிகளில் தமிழ்வழி பாடப்பிரிவுகள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பது தமிழக மக்களிடையே பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
அண்ணா பல்கலை கழகத்தின், உறுப்பு ( கிளை ) கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எதிர்வரும், கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் செயல்பட்டு வரும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளுக்கு மூடுவிழா நடைபெற்றுள்ளது. மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
விடியல் ஆட்சியில், தமிழ் மொழி மெல்ல மெல்ல அழிந்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.