முருக பெருமானுக்கு எத்தனை மனைவி: தொடரும் தி.மு.க. அமைச்சர்களின் திமிர் பேச்சு!

முருக பெருமானுக்கு எத்தனை மனைவி: தொடரும் தி.மு.க. அமைச்சர்களின் திமிர் பேச்சு!

Share it if you like it

தமிழ் கடவுள் முருக பெருமானை தமிழக அமைச்சர் பன்னீர்செல்வம் இழிவுப்படுத்திய சம்பவம் முருக பக்தர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று விழாவினை துவக்கி வைத்தார். அப்போது, அவர் இவ்வாறு பேசினார் :  

முருகன் சர்க்கரை வியாதி வரக்கூடாது என்பதற்காக திணையை சாப்பிட்டார்.  அவர் இரண்டு திருமணம் செய்து கொண்டார். இரண்டா அல்லது மூன்றா? ஆமாம் சாமி இரண்டு திருமணம் தான். அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக முருகன் தினை மாவு சாப்பிட்டார் என கூறினார். அமைச்சரின் இந்த கருத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நான் கிண்டலாக ஜோதியலாக பேசினேன் என்று அமைச்சர் சமாளித்து இருக்கிறார். இப்படியாக, விடியல் ஆட்சியில் ஹிந்துக்கள் தொடர்ந்து இழிவுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இதுவரை 100-க்கும் அதிகமான கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஹிந்து தெய்வங்கள் மீதான வெறுப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், அமைச்சர் பன்னீர் செல்வத்தின் பேச்சும் அமைந்துள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it