சோழர் காலத்து செங்கோல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய உள்துறை அமித்ஷா நேற்றைய தினம் செங்கோலின் பெருமைகள் குறித்து பத்திரிகையாளர்களிடம் உரையாற்றினார். அவரது, உரை ஹிந்தி மொழியில் இருந்தது. இந்த காணொளியை தமிழில் மொழி பெயர்த்து பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. அதனை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.