காந்தியின் தொண்டராம் ஈ.வெ.ரா.  முதல்வர் புகழாரம்!

காந்தியின் தொண்டராம் ஈ.வெ.ரா. முதல்வர் புகழாரம்!

Share it if you like it

மகாத்மா காந்தியின் தொண்டர்தான் ஈ.வெ.ரா. என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் மற்றும் ஹிந்து நம்பிக்கைகளை இழிவுப்படுத்தியவர். தவிர, தேசத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும் கருத்து தெரிவித்தவர். திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம். வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது. ஆண்களைப் போல் சிகை அலங்காரம் செய்துகொள், உடை அணிந்துகொள், ஆண்கள் பெயரை வை, ஆண்களை போல் வளர், பெண்களுக்கு கற்பு எதற்கு என்று கேட்டவர்தான் இந்த ஈ.வெ.ரா.

இப்படிப்பட்ட ஈ.வெ.ரா.வைதான் தமிழக முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அதாவது, கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் முத்திரை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார் :

பெரியாரின் கொள்கை வாரிசான கருணாநிதியை வாழ்த்துவதற்காக காந்தியின் பேரன் வந்துள்ளார் *பெரியார் சுய மரியாதை இயக்கத்தை துவங்கும் முன் காந்தியின் தொண்டராக தான் இருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

Image

Share it if you like it