உடன்பிறப்பாக மாறிய இன்ஸ்பெக்டர்… ஓசி ஆம்லெட் கேட்டு கலாட்டா!

உடன்பிறப்பாக மாறிய இன்ஸ்பெக்டர்… ஓசி ஆம்லெட் கேட்டு கலாட்டா!

Share it if you like it

காவல்துறை பெண் உயர் அதிகாரி விஜயலட்சுமி ஓசி ஆம்லெட் கேட்டு கலாட்டா செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமாக இருப்பவர் மு.க. ஸ்டாலின். இவர், ஆட்சி பொறுப்புக்கு வரும் முன்பு எனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என கூறியிருந்தார். ஆனால், விடியல் ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஒரே அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. கழக கண்மணிகள் செய்து வரும் அட்டூழியங்கள், அடாவடிகள் ஒருபுறம் இருக்க, அரசு அதிகாரிகளும் உடன் பிறப்புகள் போல செயல்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னை படப்பை அருகே உள்ள டீ கடையில் ஓசி டீ, ஓசி ஆம்லெட் கேட்டு கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி கலாட்ட செய்து இருக்கிறார். இது குறித்தான செய்தியினை நியூஸ் 18 வெளியிட்டுள்ளது.


Share it if you like it