எங்களது பயிர்களை அழிக்காதீர்கள் என விவசாயிகள் கண்ணீர் மல்க கதறி அழுத காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதனை மெய்ப்பிக்கும் வகையில், விடியல் ஆட்சியில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் நெஞ்சாலைதுறை சார்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, விவசாயிகளின் கண்ணெதிரெ அவரது பயிர்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, விவசாயிகள் தங்களது கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்ணீர் சிந்தும் காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.