உண்மை செய்தியை வெளியிட்ட சன் நியூஸ்… நெட்டிசன்கள் அதிர்ச்சி!

உண்மை செய்தியை வெளியிட்ட சன் நியூஸ்… நெட்டிசன்கள் அதிர்ச்சி!

Share it if you like it

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜீன் 28வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தி.மு.க.வின் குடும்ப ஊடகமாக இருப்பது சன் நியூஸ். இதன், ஆசிரியராக இருப்பவர் குணசேகரன். இவர், பா.ஜ.க. மற்றும் ஹிந்துக்களுக்கு எதிரான செய்திகளுக்கு மட்டுமே அதிக முக்கியதுவத்தை கொடுப்பவர். அதே வேளையில், விடியல் ஆட்சியில் நடக்கும் அட்டூழியங்களுக்கும், அடாவடிகளுக்கும் முட்டு கொடுப்பத்தில் முன்னோடி என்பது பலரின் கருத்து. அதனை மெய்ப்பிக்கும் வகையில், இவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிர்வரும் ஜூன் 28- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளதாக சன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக, இதுபோன்ற செய்திகளை மற்ற ஊடகங்கள் தானே வெளியிடும். சன் நியூஸ் எப்படி? இந்த செய்தியை வெளியிட்டது என ட்விட்டரில் நான்கு பேர் நாலு விதமாக பேசி வருகின்றனர்.


Share it if you like it