பீகார் மக்களுக்கு மூளையே கிடையாது என நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
திருவாரூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 7,000 சதுர அடியில், ரூ. 12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நாளை திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு. பீகார் மக்களுக்கு மூளையே கிடையாது என பேசிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.