என்.ஐ.ஏ.விற்கு போஸ்ட்… தி.மு.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு!

என்.ஐ.ஏ.விற்கு போஸ்ட்… தி.மு.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு!

Share it if you like it

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குறிய வகையில் தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன். இவர், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் நின்று பண்ருட்டியில் வெற்றி பெற்றவர். இவரது, பேச்சுக்கள் அனைத்தும் பிரிவினையை தூண்டும் வகையில் இருக்கும். அதேவேளையில், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருவதை வழக்கமாக கொண்டவர். இப்படியாக, இவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

இவரது, கருத்துக்கள் தி.மு.க.விற்கு தொடர்ந்து அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், வீரப்பன் பாணியில் ஒரு ஆயுத குழுவை என்னால் உருவாக்க முடியாதா? என கூறியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் மக்களிடம் பிரிவினை கருத்துக்களை இப்படி திணிப்பது சரியா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.வின் இந்த கருத்திற்காகவே அவரை என்.ஐ.ஏ. கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it