தி.மு.க. ஆட்சி சுத்த வேஸ்ட்: கதறிய  பாதிரியார்!

தி.மு.க. ஆட்சி சுத்த வேஸ்ட்: கதறிய பாதிரியார்!

Share it if you like it

தி.மு.க. ஆட்சி சுத்த வேஸ்ட் அதற்கு பதிலாக பா.ஜ.க. ஆட்சி இங்கு வந்து விடலாம் என பேராயர் குணசேகரன் சாமுவேல் பிரபல யூ டியூப் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஹிந்துக்கள் மட்டும் அல்ல, சிறுபான்மை சமூகத்திற்கு கூட நன்மை கிடைக்காது என்பதே நிதர்சனம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது சிறுபான்மை சமூகத்தின் உண்மையான பாதுகாவலர்கள் நாங்கள் தான் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறுவார். ஆட்சிக்கு வந்த பின்பு அதனை காற்றில் பறக்க விட்டு விடுவார் என்பதே உண்மை. அதனை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே, திராவிட முன்னேற்ற கழகம் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என நம்பினோம். ஆனால், நாங்கள் ஏமாற்றம் அடைந்தது மட்டுமே மிச்சம். பல்வேறு, வாக்குறுதிகளை கிறிஸ்தவர்களுக்கு தி.மு.க. வழங்கி இருந்தது. ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் அக்கட்சி நிறைவேற்றவில்லை. தேர்தல் நேரத்தில் அந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கிறிஸ்தவர்களுக்கு கூறியிருந்தோம். இதையெல்லாம், இப்போது சிந்தித்து பார்க்கும் போது வேதனையாக இருக்கு என கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேராயர் குணசேகரன் சாமுவேல் கதறி இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், இத்தனை ஆண்டு காலம் நாங்கள் நினைத்து கொண்டு இருந்தோம். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், தேவாலயங்கள் அனைத்தையும் மூடி சீல் வைத்து விடுவார்கள் என்று ஆனால், தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு தேவாலயம் ஒன்றிற்கே சீல் வைத்து இருக்கிறார்கள். இந்த தி.மு.க. ஆட்சி வேஸ்ட் என பேராயர் குணசேகரன் மீண்டும் கதறிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் இதோ.


Share it if you like it