தமிழக பெண்களை இழிவுபடுத்திய அமைச்சரின் ஆணவப்பேச்சு!

தமிழக பெண்களை இழிவுபடுத்திய அமைச்சரின் ஆணவப்பேச்சு!

Share it if you like it

தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி நீங்கள் எல்லாம் ஓசீ பஸ்ஸில் தானே வந்தீர்கள் என பெண்களை பார்த்து கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர், தனது கட்சி தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் மரியாதை குறைவாக நடந்து கொள்வதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் மணம் பூண்டியில் நியாய விலை கடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அமைச்சர் ஆண் பெண் சமம். இந்த, ஊரில் ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஒரு பெண். இவர், ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த, ஒன்றியத்தின் தலைவராக இருக்கிறார் என்றால் அதுதான், திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என குறிப்பிட்டு இருந்தார். நீங்க தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் தானே என்று அமைச்சர் பொன்முடி பொது மேடையில் கேட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுப்பொருளாக மாறியிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதி, கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா விளக்கப் பொதுக்கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இதையடுத்து, பேசிய அமைச்சர் உங்களுக்கு எல்லாம் ரூ. 4,000 ஆயிரம் கொடுத்தது யாரு வாய் திறந்து சொல்லுங்க. இப்ப, நீங்க எப்படி பஸ்ஸில் வருகிறீர்கள். இங்கிருந்து, கோயம்பேடு போனாலும் எங்கே? போனாலும் ஓசீ பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என அமைச்சர் பொன்முடி நக்கலாக பேசியிருக்கிறார். அமைச்சரின், இக்கருத்து தமிழக பெண்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it