இன்றைய சம்பவம்… கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டு பெண்கள் சண்டை!

இன்றைய சம்பவம்… கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டு பெண்கள் சண்டை!

Share it if you like it

ஓசியில் பயணம் மேற்கொள்ள விருப்பமில்லை எங்களுக்கு டிக்கெட் கொடுங்கள் என கண்டக்டரிடம் பெண்கள் வாக்குவாதம் செய்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓசியில் தமிழக பெண்கள் பஸ்ஸில் பயணம் மேற்கொள்வதாக, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் பேசியிருந்தார். இச்சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அண்மையில் அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது, எனக்கு, ஓசியில் பயணம் மேற்கொள்ள விருப்பமில்லை, டிக்கெட் கொடு என்று கண்டக்டரிடம் கேட்டு இருக்கிறார். அதற்கு, அவர் உங்களிடம் காசு வாங்க மாட்டேன். நீங்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து, பாட்டிக்கும், கண்டக்டருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இக்காணொளியை, யாரோ ஒருவர் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இதையடுத்து, அக்காணொளி அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

கோவை பாட்டியின், நியாயமான கோவம் தமிழக பெண்களிடம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் யாருக்கும் மறுகருத்து இருக்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர், ஓசியில் பயணம் மேற்கொள்ள எனக்கு விருப்பமில்லை டிக்கெட் கொடுங்கள் என்று கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து இருக்கிறார். இதனை தொடர்ந்து, மற்றொரு பெண்மணி அந்த அம்மா பேசுவதில் நியாயம் இருக்கிறது. எனக்கும், டிக்கெட் கொடுங்கள் என்று பேசுவது போல அக்காணொளி அமைந்து இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it