தி.மு.க. நிர்வாகியின் ஆபாச பேச்சு: வாய் திறப்பார்களா பெண் உரிமை போராளிகள்?

தி.மு.க. நிர்வாகியின் ஆபாச பேச்சு: வாய் திறப்பார்களா பெண் உரிமை போராளிகள்?

Share it if you like it

பா.ஜ.க. பெண் நிர்வாகிகளை தி.மு.க.வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான சைதை சாதிக் என்பவன் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து இருக்கிறான். இக்காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பொதுவாக ஆபாசமாகவும், அருவருக்கதக்க வகையிலும் பேசக் கூடியவர்கள். அந்த வகையில், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து இருந்தார். அதேபோல, தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சுட்டிக்காட்டி கிண்டல் செய்யும் விதமாக அருவருக்கதக்க வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இப்படியாக, தி.மு.க.வை சேர்ந்த முக்கிய புள்ளிகளின் பேச்சு இருந்து வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, அப்பாவி பெண்களை பியூட்டி பார்லர் சென்று தாக்குவது. தன்னிடம் தவறாக நடந்து கொண்ட தி.மு.க. உறுப்பினர் பற்றி மேலிடத்தில் புகார் தெரிவித்தால், அப்பெண்னை கட்சியை விட்டே நீக்குவது. பாதிக்கப்பட்ட பெண் நீதி வேண்டி போராடுவது போன்ற சம்பவங்கள் தி.மு.க.வில் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தி.மு.க.வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான சைதை சாதிக் என்பவன் நடிகைகளும், பா.ஜ.க. நிர்வாகிகளுமான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரின் பெயர்களை சொல்லி, நாலுமே ஐடங்கள் என்று அவதூறாகப் பேசியதோடு, குஷ்புவை தி.மு.க. நிர்வாகி ஒருவருடன் தொடர்புபடுத்தி கீழ்த்தரமாக பேசியிருக்கிறான்.

சமூகநீதி, பெண் விடுதலை, பெண்கள் உரிமைகள் குறித்து பேசும் சுந்தரவள்ளி, ஜோதிமணி, எம்.பி. கனிமொழி போன்றவர்கள் தி.மு.க. நிர்வாகியின் இந்த ஆபாச பேச்சை கண்டிப்பார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it