அ.தி.மு.க எம்பி முதல்வருக்கு பதிலடி!

அ.தி.மு.க எம்பி முதல்வருக்கு பதிலடி!

Share it if you like it

தமிழக முதல்வருக்கு தி.மு.க எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்று அ.தி.மு.க.வை கட்டுகோப்புடன் வழி நடத்தும் தலைவர் யார்? என்ற கேள்வி அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எழுந்து இருக்கின்றன. இதற்கு, தீர்வு காணும் வகையில் நேற்றைய தினம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆனால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு மத்தியில் சுமூகமான முடிவு எட்டவில்லை என்று கூறப்படுகிறது.

Image

இந்த நிலையில் தான், தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், மற்றொரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த பிரச்சனைக்கு செல்லவில்லை. அதில், தலையிட வேண்டிய அவசியமும் இல்லை. தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

இதற்கு, அ.தி.மு.க மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம், அப்பா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என வாரிசு அரசியல் நடத்தும் இயக்கம் தி.மு.க ரொம்ப சந்தோப்படாதீங்க முதல்வரே, விரைவில் உங்கள் மகன் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்யும் போது உங்கள் கட்சியில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கத்தான் போகிறோம் என்று தக்க பதிலடியை கொடுத்து உள்ளார்.


Share it if you like it