அமைச்சரின் கார் மோதியதா?: ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்…வைரலாகும் காணொளி!

அமைச்சரின் கார் மோதியதா?: ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்…வைரலாகும் காணொளி!

Share it if you like it

அமைச்சர் பொன்முடியின் கார் மோதியதில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவரது, கார் இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியதாகவும், அதில் அந்த நபர் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணளொளி ஒன்று வைரலாகி வருகிறது.

இதில், கொடுமை என்னவென்றால் காயமடைந்த நபரை சக மனிதன் என்ற ரீதியில் கூட பார்க்க வராமல் காரிலேயே அமைச்சர் இருந்ததுதான். இந்த காணொளியை, பதிவு செய்த நபரை காவல்துறை அதிகாரி தடுத்து நீங்கள் யார் என கேட்கிறார். அதற்கு, அந்த நபர் நான் ஒரு நிருபர் என்று கூறுகிறார். இதையடுத்து, அந்த காணொளி முடிவு பெறுகிறது.


Share it if you like it