கட்சிக்காரனிடமே கப்பம் கேட்ட  தி.மு.க நிர்வாகி: வைரலாகும் காணொளி!

கட்சிக்காரனிடமே கப்பம் கேட்ட தி.மு.க நிர்வாகி: வைரலாகும் காணொளி!

Share it if you like it

தி.மு.க நிர்வாகி கமிஷன் கேட்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்தே சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதுதவிர, எங்கு பார்க்கினும் லஞ்சம், ஊழல் தலை விரித்து ஆடி வருகிறது. அதனை மெய்ப்பிக்கும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விடியல் அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி கொண்டே இருக்கிறார். இதற்கு, முறையான பதில் அளிக்க முடியால் ஆளும் தரப்பு இன்று வரை திணறி வருகிறது. இதுதவிர, அண்ணாமலையின் குடைச்சலை எப்படி? சமாளிப்பது என்று தெரியாமல் ஸ்டாலின் அரசு விழி பிதுங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், சென்னை கொடூங்கையூர் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவி என்பவர் தனது சொந்த நிலத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். அந்தவகையில், தி.மு.க.வின் 34-வது வார்டு பெண் கவுன்சிலர் சர்மிளா காந்தியின் கணவர் இங்கு வீடு கட்ட வேண்டும் என்றால் தனக்கு 10 லட்ச ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்று மிரட்டல் விடுத்த காணொளி சமீபத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இச்சம்பவத்தின் தாக்கமே குறையாத நிலையில், மேலூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் நாகராஜ் என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு லஞ்சம் கேட்பது போன்ற காணொளி ஒன்றினை பிரபல அரசியல் விமர்சகர் செல்வகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அதன் லிங்க் இதோ.


Share it if you like it