பிரபல பெண் தாதா எஸ்தரிடம்  ஜொல்லுவிட்ட காவலர்: வைரலாகும் ஆடியோ!

பிரபல பெண் தாதா எஸ்தரிடம் ஜொல்லுவிட்ட காவலர்: வைரலாகும் ஆடியோ!

Share it if you like it

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தாதாவிடம் உளவுத்துறையை சேர்ந்த காவலர் ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அதன்பின் நீதிமன்ற உத்தரவின் படி பிணையில் இருப்பவர் எஸ்தர் (எ) யோகேஸ்வரி. இவர், குன்றத்தூர் முன்னாள் தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன், சோமங்கலம் காவல் நிலையத்தின் உளவுப்பிரிவை சேர்ந்த காவலர் மாதவன் செல்போனில் ஆபாசமாக பேசுவது போன்று அந்த ஆடியோ அமைந்துள்ளது.

அதில், அவர் கூறியதாவது ; பிரபல ரவுடி சச்சினை யாரும் பிடிக்க முடியாது. அவனுக்கு, காவல்துறையின் அனைத்து நுணுக்கங்களும் நன்கு தெரியும். அதுசரி, என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்? நீ என்னை எவ்வளவு லவ் பண்ற? என்று எஸ்தரிடம் காவலர் மாதவன் அசடு வழிந்துள்ளார். இந்த ஆடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குற்றவாளிகளை இனம் கண்டு கட்டப்படுத்த வேண்டிய பொறுப்பு உளவுத்துறை காவலருக்கு உண்டு. அதனையெல்லாம், மறந்து விட்டு பிரபல ரவுடிக்கு ஆதரவாக காவலர் புகழ்ந்து பேசியிருப்பதுதான் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it