வடமாநில தொழிலாளர்கள் குறித்து யூ டியூப்பர் ஜீவசகாப்தன் அவதூறு பரப்பி பேசிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தற்போது இந்தியா முழுவதும் பேசுப் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வட மாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதேவேளையில், வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரபல யூ டியூப்பர் ஜீவசகாப்தன் லிபர்டி இணையதள ஊடகத்தில் பேசும் போது, வடமாநில தொழிலாளர்களால் தமிழகத்திற்கு ஆபத்து வந்து விட்டது. ஆகவே, அவர்களை புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தில் அவர்களை அனுமதிக்க கூடாது என்ற ரீதியில் பேசியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.