தி.மு.க.விற்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!

தி.மு.க.விற்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனம்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த தி.மு.க. அரசுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பி விட்டு இருக்கிறது. இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், விடியல் அரசு பா.ஜ.க. தலைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கு, பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தனது கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.

இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், சமூக வலைதளங்களில் உலாவந்த வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினை தற்போது தேசிய பிரச்சினையாகியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் நிலை குறித்து அண்ணாமலை தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவர் கேள்விகளுக்கு விளக்கம் சொல்லாமல், வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it