கடலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பொதுமக்களை பார்த்து திட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தி.மு.க.வின் மூத்த தலைவரும், உயர்கல்வித்துறை அமைச்சருமாக இருப்பவர் பொன்முடி. இவர், மற்றவர்களை இழித்தும், பழித்தும் பேசுவதை தனது கொள்கையாக கொண்டவர். அந்தவகையில், தனது தொகுதியை சேர்ந்த பொதுமக்கள், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என யாரும் அமைச்சர் பொன்முடியிடம் இருந்து தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விழுப்பபுரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை பார்த்து நீங்கள் எனக்கு ஓட்டுபோட்டு கிழித்துவிட்டீர்களா? என்று தான் ஒரு அமைச்சர் என்பதையும் மறந்து பேசிய காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.