இன்னும் மெளனம் ஏன்  முதல்வரே?

இன்னும் மெளனம் ஏன் முதல்வரே?

Share it if you like it

இன்னும் ஏன் மெளனமாக இருக்கிறீர்கள் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார்

இதுகுறித்து, அவர் கூறியதாவது ; திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இளங்கோ, ஒரு  குடும்ப பிரச்சனையில் தலையிட்டு, வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார். அடி வாங்கியவர்கள், காவல்துறையிடம் புகார் அளித்தும், தி.மு.க. கவுன்சிலர் என்பதால், மேற்கொண்டு எந்தவிதமான நடவடிக்கையையும் காவல்துறை எடுக்கவில்லை.

காவல்துறையினரின் அலட்சியமும், கவுன்சிலரின் வன்முறை வெறியாட்டம் தற்போது கொலையில் முடிந்திருக்கிறது. உலகில் அதிக குற்றங்கள் நடக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்று, தமிழகத்தை தி.மு.க.வினர் மாற்றி வருகின்றனர். இன்னும் எத்தனை நாட்கள் தான் கண்டும் காணாமல் மவுனமாக இருப்பீர்கள் ஸ்டாலின் என அண்ணாமலை கூறியுள்ளார்.


Share it if you like it