பத்திரிகையாளர்களிடம் ‘நேருக்கு’ நேராக பேசிய சிவா!

பத்திரிகையாளர்களிடம் ‘நேருக்கு’ நேராக பேசிய சிவா!

Share it if you like it

நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. நேரம் வரும் போது கூறுகிறேன் என பத்திரிகையாளர்களிடம் திருச்சி சிவா எம்.பி. கூறியிருப்பது ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சிதுறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் திருச்சி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டன. இச்சம்பவம், இன்றுவரை தமழிக மக்களிடையே பேசுப்பொருளாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், டெல்லியில் இருந்து திருச்சி வந்தார் எம்.பி. சிவா. இதையடுத்து, அவர் பத்திரிகையாளர்களிடம் இவ்வாறு கூறினார் ; “நடந்தவற்றை நான் ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்துகொண்டேன். இப்போது நான் எதையும் பேசும் மன நிலையில் இல்லை. கடந்த காலத்திலும் சோதனைகளை சந்தித்து உள்ளேன். அடிப்படையில் நான் முழுமையான, அழுத்தமான கட்சிக்காரன்.

என்னை விட எனக்கு கட்சிதான் முக்கியம் என்ற காரணத்தால் பலவற்றை நான் பெரிதுபடுத்தவில்லை. யாரிடமும் புகார் கூறவில்லை. தனி மனிதனைவிட இயக்கம் பெரியது என்ற தத்துவத்தில் வளர்ந்தவன் நான். அப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தேன். இப்போது நடந்துள்ள நிகழ்ச்சி மிகுந்த மன வேதனையை தந்துள்ளது. வீட்டில் உள்ள உதவியாளரிடம் நான் பேச வேண்டும். நான் ஊரில் இல்லாதபோது அவர்கள் எல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நான் இப்போது எதையும் பேசும் மனநிலையில் இல்லை.

நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால். நான் பேசும் மனநிலையில் இல்லை. நான் மிகுந்த மனச்சோர்வில் உள்ளேன். நான் விரைவில் உங்களிடம் பேசுகிறேன் எல்லாவற்றையும் கூறுகிறேன். விரைவில் கூறுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


Share it if you like it