ஆளுநரை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பாடை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆன்லைன் ரம்மி தொடர்பான விவாதம் தற்போது பொதுமக்களிடையே பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்த விளையாட்டு தொடர்பாக தெளிவான விளக்கத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தி இருந்தார். எனினும், அதுகுறித்து கூறாமல் தமிழக அரசு தொடர்ந்து கள்ள மெளனமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பாடை கட்டி மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இதன், பின்னணியில் தி.மு.க. உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.