ஈரோட்டில் இடைத்தேர்தல் நடத்திய அதிகாரியின் வீட்டில் லஞ்ச ஒழுப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்தவர் சிவக்குமார். இவரது, வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தியுள்ளனர்.
பல்லாவரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர் மீது எழுந்த புகார் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.