பதறிய ஆர்.எஸ். பாரதி…கதறிய தி.மு.க. எம்.பி: பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு!

பதறிய ஆர்.எஸ். பாரதி…கதறிய தி.மு.க. எம்.பி: பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பு!

Share it if you like it

அண்ணாமலையின் ஊழல் பட்டியலுக்கு பதில் அளிக்க முடியாமல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தி.மு.க. மூத்த தலைவர்கள் அலறிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று தி.மு.க.வின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதுதான், தற்போது பொதுமக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் விதமாக, தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி, மாநிலங்களவை எம்.பி. வில்சன் உள்ளிட்டவர்கள் பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது, நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்களால் முறையாக பதில் அளிக்க முடியவில்லை. இதனால், எம்.பி. வில்சன் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் ஆர்.எஸ்.பாரதியிடம் சீக்கிரம் பேட்டியை முடித்து விடுங்கள் என கட்டாயப்படுத்தி இருக்கிறார். நிருபர்கள், எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க முடியால் இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இருந்து ஓட்டம் எடுத்த காணொளிதான் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it