சபரீ, உதயை கோர்த்து விட்டது என் குரல் அல்ல: 3 நாள் கழித்து அலறிய அமைச்சர்!

சபரீ, உதயை கோர்த்து விட்டது என் குரல் அல்ல: 3 நாள் கழித்து அலறிய அமைச்சர்!

Share it if you like it

ஆடியோ குறித்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நிதியமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவரது, ஆடியோ ஒன்று அண்மையில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் கடந்த ஒரு வருடத்தில் ரூ. 30,000 கோடி குவித்துள்ளதாக பேசியிருந்தார். இந்த ஆடியோதான் தற்போது தமிழக மக்களிடையே பேசுப்பொருளாக இருந்து வருகிறது.

இப்பட்டிப்பட்ட சூழலில், நிதியமைச்சர் அது தன் குரல் பதிவு அல்ல என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது, ஆடியோ வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து தான் அது தன் குரல் அல்ல என்பது அமைச்சருக்கு தெரியுமா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. சபரீயையும், உதயநிதியையும் கோர்த்து விட்டு தற்போது நடிப்பது சரியா என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.


Share it if you like it