தி.மு.க.விற்கு கெட்ட காலம் பொறக்குது: உதயநிதி அடுத்த முதல்வர் அல்ல… மூத்த பத்திரிகையாளர் திடுக் தகவல்!

தி.மு.க.விற்கு கெட்ட காலம் பொறக்குது: உதயநிதி அடுத்த முதல்வர் அல்ல… மூத்த பத்திரிகையாளர் திடுக் தகவல்!

Share it if you like it

தி.மு.க.வின் அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அல்ல செந்தில் பாலாஜி தான் என மூத்த பத்திரிகையாளர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

தி.மு.க.வில் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி இருந்து வருகிறது. ஒரு முறையாவது முதல்வராக அமர்ந்து விட வேண்டும் என கோவில் கோவிலாக அமைச்சர் துரைமுருகன் சுற்றி வருகிறார். தி.மு.க. எம்.பி. கனிமொழி மறுபுறம் காய் நகர்த்தி வருகிறார். தி.மு.க. இன்று ஆட்சியில் இருப்பது என்னால்தான் என சபரீசன் தனது நெருங்கிய வட்டாரங்களில் கூறி வருவதாக செவி வழி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, தமிழகத்தின் அடுத்த முதல்வர் துர்கா ஸ்டாலின் தான் வர வேண்டும் என டாக்டர். சுப்பிரமணியன் சுவாமி தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படியாக, தி.மு.க.வில் அதிகார போட்டி உள்ளே வெளியே என மங்காத்தாவாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், ஆகாயம் தமிழ் யூ டியூப் சேனலுக்கு மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் அளித்த பேட்டியில் திடுக்கிடும் தகவலை கூறியிருக்கிறார். அதாவது, செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் 50 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தி.மு.க.வின் அடுத்த முதல்வராக உதயநிதி ஸ்டாலின் வரமாட்டார் என்ற பகீர் தகவலை தெரிவித்து இருக்கிறார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it