ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே… ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள் எல்லாம் ஞாபகம் வருதே!

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே… ஸ்டாலின் சொன்ன வார்த்தைகள் எல்லாம் ஞாபகம் வருதே!

Share it if you like it

எனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, சன் டிவி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து, ஸ்டாலினிடம் பல்வேறு கேள்விகளை இளைஞர்கள் முன்வைத்தனர்.

இதற்கு, பொறுமையாகவும், பொறுப்புடனும் அவர் பதில் அளித்தார். எனது ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனது கட்சிகாரர்களோ, உறவினர்களோ என யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கூறிய காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it