தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் ஆர்.எஸ். பாரதி. இவர், அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். அதன்சாராம்சம் இதுதான், அகில இந்திய தலைவர்களில் மூத்த தலைவர்கள் அனைவரும் நமது தலைவர் ஸ்டாலினுக்கு அதிக மரியாதை தருகிறார்கள். அவருக்குதான், அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்ற ரிதியில் பேசியிருந்தார். இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருந்தது. அந்த வகையில், அதன் பதவி ஏற்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, விழா மேடையில் இருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி என்ன? மரியாதை கொடுத்தார் என்பதை நாடே நன்கு அறியும் என்பது குறிப்பிடத்தக்கது.