சிவபெருமான் பழங்குடியினத்தை சேர்ந்தவர் – எம்.எல்.ஏ. அர்ஜீன் சிங் கருத்து!

சிவபெருமான் பழங்குடியினத்தை சேர்ந்தவர் – எம்.எல்.ஏ. அர்ஜீன் சிங் கருத்து!

Share it if you like it

சிவபெருமான் பழங்குடியினத்தை சேர்ந்தவர் என மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்ஏ. அர்ஜூன் சிங் ககோடியா கூறியுள்ளார்.

இது தொடர்பாக, சியோனி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பர்காட்டில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ககோடியா இவ்வாறு கூறினார் : கடைதலின்போது வெளிப்பட்ட அமிர்தத்தை புத்திசாலிகள் குடித்துவிட்டு, விஷத்தை விட்டுவிட்டார்கள். அந்த விஷத்தை என்ன செய்வது? யார் குடித்தது? இமயமலையில் வசிக்கும் போலே பண்டாரிதான் (சிவபெருமான்) அந்த விஷத்தைக் குடித்தார்.

பழங்குடியினர் போலே பண்டாரி என்றுதான் அழைக்கப்படுகின்றனர். அந்த இனத்தைச் சேர்ந்த சிவன் விஷத்தை தான் குடித்து இந்த உலகுக்கு உயிர்கொடுத்தார். எனவே, நமது சமூகம் மிகவும் பெருமை வாய்ந்தது. இந்த மக்கள் அனைவரும் நம்மில் இருந்து வந்தவர்கள். அதனால்தான் அனைவரையும் மதிக்கிறோம் என்று அர்ஜூன் சிங் ககோடியா கூறினார்.


Share it if you like it