ஆதாரத்தை காட்டி சேதாரமாக்கிய நிருபர்… திணறிய அமைச்சர்!

ஆதாரத்தை காட்டி சேதாரமாக்கிய நிருபர்… திணறிய அமைச்சர்!

Share it if you like it

தமிழக பால்வலத்துறை அமைச்சர் மனோதங்கராஜிடம் நிருபர் ஒருவர் ஆதாரத்துடன் புகார் அளித்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், நடப்பது தி.மு.க. ஆட்சி யார் நம்மை கேள்வி கேட்க முடியும் என்ற ரீதியில் கழக கண்மணிகளின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. அந்த வகையில் அமைச்சர்களும் தங்களது மனம் போக்கில் செயல்பட்டு வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், அமைச்சர் கே.என்.நேரு, பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பத்திரிகையாளர்களை திட்டுவதும், ஒருமையில் பேசுவதையுமே இன்று வரை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

பத்திரிகையாளர்கள் அனைவரும் தங்களது அடிமைகள் என்ற மனோபாவத்தில் அவர்களின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்றைய தினம் நியூஸ் தமிழ் ஊடக நிருபரிடம் மாட்டிக் கொண்டு திணறியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வரைலாகி வருகிறது. இவரை, போன்றே அனைத்து பத்திரிகையாளர்களும் இருந்தால்தான் தி.மு.க. அமைச்சர்கள் திருந்துவார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it