பத்திரிகையாளர்கள் கேள்வி : ஒரே பதிலை திரும்ப திரும்ப சொல்லும் முதல்வர்!

பத்திரிகையாளர்கள் கேள்வி : ஒரே பதிலை திரும்ப திரும்ப சொல்லும் முதல்வர்!

Share it if you like it

நிருபர்கள் வைக்கும் கேள்விக்கு ஒரே பதிலை முதல்வர் ஸ்டாலின் கூறிவருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியில் தி.மு.க.வினரை தவிர மற்றவர்கள் முதல்வர் மீது கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சந்தி சிரித்து வருகிறது. குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பு, கொலை, கொள்ளை, திருட்டு, கஞ்சா என தமிழகம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதனையெல்லாம், கட்டுப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக முதல்வருக்கு உள்ளது. எனினும், இதுகுறித்து எல்லாம் அவர் கவலைப்படுவதாக தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலின், எப்போதெல்லாம் பத்திரிகையாளர்களை சந்திக்கிறாரோ, அப்போதெல்லாம் அவர் அளிக்கும் ஒரே பதில் இதுதான். அது பொய், அந்ததுறை அமைச்சரே கூறி விட்டார், எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன, போலியாக சித்தரிக்கப்பட்ட செய்தி. இதை தவிர, முதல்வர் வேறு எதையும் கூறுவதில்லை. குறிப்பாக, மேற்கூறிய வார்த்தைகளை அவர் துண்டு சீட்டு இல்லாமல் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it