மாணவிகள் மதுகுடிக்கும் காணொளிகள் வைரல்: பூரண மதுவிலக்கு எப்போ?

மாணவிகள் மதுகுடிக்கும் காணொளிகள் வைரல்: பூரண மதுவிலக்கு எப்போ?

Share it if you like it

பள்ளி மாணவிகள் மது குடிப்பது போன்ற காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் இன்று உலகிற்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழர்களுக்கு என்று உலகம் முழுவதும் நற்பெயர் இருந்து வருகிறது. ஆனால், திராவிட ஆட்சியில் தமிழ் கலாச்சாரம் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி இருப்பது கொடுமையிலும் கொடுமை. அந்த வகையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்கள், மதுவிற்கு அடிமையாகும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்கதையாக இருந்து வருகிறது.

நாங்கள், ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு உண்டு என்று கூறியவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். ஆனால், இந்த ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. எனினும், பூரண மதுவிலக்கினை விடியல் அரசு இன்று வரை கொண்டு வரவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், பள்ளி மாணவிகள் மதுகுடிப்பது போன்ற காணொளிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Image

Share it if you like it