கருணாநிதி பெயரில் பாக்சிங் அகாடமி துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், கோபாலபுரத்தில் பாக்சிங் அகடமி அமைக்கப்படுமா என கடந்த ஆண்டு சட்டசபையில் கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், உலகத்தரத்திலான பாக்சிங் அகடமி கருணாநிதி பெயரில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், அதனை செயல்படுத்தும் விதமாக பாக்சிங் அகடமி அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இதனிடையே, கடந்த 2018- ஆம் ஆண்டு தி.மு.க. நிர்வாகிகள் ஓசி பிரியாணி கேட்டு பாக்சிங் செய்து இருந்த காணொளியை இன்றும் சமூகவலைத்தளங்களில் காண முடியும்.