ஆதாரம் இருந்தால்தான் வருமானவரித்துறையினர் வருவார்கள் – ஸ்டாலின் பேச்சு!

ஆதாரம் இருந்தால்தான் வருமானவரித்துறையினர் வருவார்கள் – ஸ்டாலின் பேச்சு!

Share it if you like it

வருமானவரித்துறை தொடர்பாக அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை தலைமை செயலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கு, அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதேவேளையில், வருமானவரித்துறையினர் ஆதராம் இல்லாமல் வரமாட்டார்கள் அவர்கள் தனி அமைப்பை சேர்ந்தவர்கள். இதுகுறித்து, உரிய விளக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களிடம் கூற வேண்டும் என ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது, இல்லத்தில் நேற்றிரவு வரை வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனிடையே, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இப்பட்டிப்பட்ட சூழ்நிலையில் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வருமானவரித்துறை குறித்து பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Image


Share it if you like it