தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பதால் இந்த ஆய்வு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.