திராவிட மாடல் சாலையின் தரம் குறித்து அறியாமல் சென்னை கமிஷனர் பேசியிருப்பது சரியா? என நெட்டிசன்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் முழுவதும் ஊராட்சி அலுவலகங்கள் தொடங்கி, மாநகராட்சி வரை பல்வேறு ஊழல்கள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, சாலைகள் அமைப்பதில் நடக்கும் முறைகேடுகள் சொல்லி மாளாது. பல்வேறு இடங்களில் போடப்பட்ட சாலைகள் படுமோசம். காலை வைத்து தேய்த்தாலே செதில் செதிலாக பெயர்ந்து கொண்டு வரும் அளவுக்கு தரமற்றதாக இருந்தன. இன்னும் சில இடங்களில் கையால் பெயர்த்து எடுத்தால் வெங்காயத்தைப் போல உரித்துக் கொண்டு வந்தன.