ஒரே ஒரு அடைமழைதாங்க… தர்மபுரி எம்.பி.யின் புதிய பஸ் ஸ்டாண்ட்… நெட்டிசன்கள் வாழ்த்து!

ஒரே ஒரு அடைமழைதாங்க… தர்மபுரி எம்.பி.யின் புதிய பஸ் ஸ்டாண்ட்… நெட்டிசன்கள் வாழ்த்து!

Share it if you like it

தி.மு.க. எம்.பி. கட்டிக்கொடுத்த புதிய பஸ் ஸ்டாண்ட்டில் மழை நீர் ஒழுகிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில் குமார். இவர், மக்களுக்கு செய்த சேவைகளை காட்டிலும் டுவிட்டரில் மாற்று கட்சியை சேர்ந்தவர்களை மட்டம் தட்டுவதிலேயே தனது முழு நேர தொழிலாக கொண்டவர். இதனிடையே, தனது தொகுதி மேம்பாட்டின் நிதியில், தர்மபுரியில் ரூ. 56 லட்சத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் ஒன்றினை தி.மு.க. எம்.பி. செந்தில் கட்டினார். இதன், திறப்பு விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடினார். இந்த நிலையில், தர்மபுரியில் அண்மையில் அடை மழை பெய்து இருக்கிறது. அப்போது, பஸ் ஸ்டாண்டின் உள்ளே இருந்தவர்கள் மழையில் நனையும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்த யாரோ ஒருவர் அதனை தனது செல்போனில் பதிவு செய்து சமூகவலைத்தளத்தில் பரவ விட்டு இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

விடியல் ஆட்சியில் மக்களை ஏமாற்ற முடியும் மழையை ஏமாற்ற முடியுமா? நல்ல வேலை சர்வாதிகாரி மழையின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடவில்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it