தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் தாயை தி.மு.க. நிர்வாகி இழித்தும், பழித்தும் பேசிய காணொளி ஒன்று பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவரது, பெற்றோரை தி.மு.க.வைச் சேர்ந்த குடியாத்தம் குமரன் என்பவன் மிகவும் கீழ்த்தரமாகவும் இழித்தும் பழித்தும் பேசியிருக்கிறான். இவனது, பேச்சு தமிழக பெண்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கருத்து வேறுபாடு, கொள்கை வேறுபாடு, சித்தாந்தம் வேறுபாடு என ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால், ஒரு கட்சியின் தலைவரின் தாயை பழிப்பது சரியா? எதற்கெடுத்தாலும் பெண் உரிமை, பெண் பாதுகாப்பு, குறித்து பேசும் கனிமொழி தி.மு.க. நிர்வாகியை கண்டிப்பாரா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.