எம்.எல்.ஏ.வின் உதவியாளரை தாக்கிய அமைச்சர்!

எம்.எல்.ஏ.வின் உதவியாளரை தாக்கிய அமைச்சர்!

Share it if you like it

திருத்தணி சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் சதீஷ் என்பவரை அமைச்சர் நாசர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டார். அந்த வகையில், கட்சியின் முன்னோடிகள், கழக கண்மணிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, அமைச்சர் நாசர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திருத்தணி சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் சதீஷ் என்பவர் அமைச்சரை கடக்க முயன்று இருக்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக, அவரது கைபட்டு நாசர் பேசிக் கொண்டிருந்த மைக் கீழே விழுந்துள்ளது. இதனால், கடும் கோவமடைந்த அமைச்சர் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் முதுகில் ஓங்கி ஒரு குத்து விட்டுள்ளார். அமைச்சரால், அவமதிக்கப்பட்ட சதீஷ் கோபத்துடன் மேடையில் இருந்து கீழே இறங்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it