முதல்வர் மனைவிக்காக சடங்கு, சம்பிரதாயங்களை மீறும்  அறநிலையத்துறை!

முதல்வர் மனைவிக்காக சடங்கு, சம்பிரதாயங்களை மீறும் அறநிலையத்துறை!

Share it if you like it

தெய்வத்திற்கு பிடிக்க வேண்டிய குடை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்காவிற்கு பிடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா. இவர், தீவிர பக்தி கொண்டவர். அந்தவகையில், தமிழகத்தில் உள்ள பிரபலமான கோவில்களுக்கு சென்று வருவதை வாடிக்கையாக கொண்டவர். இந்நிலையில், சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான திருவெற்றியூர் தியாகராஜர் கோவிலுக்கு அண்மையில் சென்று இருக்கிறார். இதையடுத்து, ஆலயத்தின் சார்பில் துர்கா ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. துர்கா சென்று இருந்த நேரம் பார்த்து நல்ல மழை பெய்து இருக்கிறது. இதையடுத்து, அவர் மழையில் நனைந்து விட கூடாது என்பதற்காக, சாமிக்கு மட்டுமே பிடிக்கும் குடை துர்காவிற்கு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், பக்தர்கள் மத்தியில் கடும் கோவத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it